மன்னியுங்கள்
முக்கோடி மூத்தகுடி
முத்மிழன் வாழ்ந்தகுடி
முள்ளிவாய்க்கால் பரப்பிலே
குண்டுதுளைத்துக் கிடந்தானே
வெற்றுவயல் எங்கிலுமே
சதைசதையாய்ப் பிண்டங்கள்
பச்சப்பிள்ளை கதறலையும்
கழுகுச்சத்தம் மறைத்ததுவே
பட்டுப்பிஞ்சு உடலங்களை
நாய் நரியும் கவ்வியதே
பெற்றவளும் மற்றவரும்
உடல்சிதைந்து கிடந்தனரே
சீறிய இரத்தங்களை
பூமித்தாயே ஊறிஞ்சினாளே
சிதறிய உடலங்களை
மண்மகளே எடுத்தாளே
வெண்ணிற மேகங்களை
பிணவாடை நிரப்பியதே
தமிழனின் இதயங்களை
உயிர்வலி அழுத்தியதே
நீதிகேட்க யார்வந்தார்
நியாயம்சொல்ல எவர்போனார்
லட்சமுயிர் அழிந்ததனை
வேடிக்கைதான் பார்த்தனரே
ஞாபகங்கள் கொல்கிறதே
நஞ்சுக்கொடி சுழல்கிறதே
செத்தவரை வழிபடவும்
துரோகிக்குப் பிடிக்கலையே
மன்னியுங்கள் ஆத்மாக்களே
நாதியற்றுக் கிடக்கின்றோம்….
ரூபன் சிவா
பிரான்ஸ்
மே 18